tamilnadu

img

‘நீட்’ மாணவர் மனங்களை நிலைகுலைக்கிறது மு.க.ஸ்டாலின்

சென்னை:
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-

நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது.தற்கொலைக்கு முன் மாணவி பேசிய ஆடியோ நீட் தேர்வின் கோரமுகத்தைக் காட்டுகிறது. ஒரு தேர்வு, மாணவர் மனங்களை நிலைகுலைய வைப்பதை அனிதா முதல் ஜோதிஸ்ரீதுர்கா மரணம் வரை உணர முடிகிறது.தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் என்பது ஒரு தேர்வே அல்ல.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

;