tamilnadu

இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறித்த அரசுகள் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை, மே 6-தமிழகத்தில் வெளி மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வாரி வழங்குவது பச்சை துரோகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக வேலையே கிடைக்காமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் போது, இங்குள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட மாநிலத்தவருக்கு அத்தனை வேலை வாய்ப்புகளையும் வாரி வழங்கிவரும் பச்சை துரோகச் செயலுக்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மனிதநேயமின்றி தட்டிப் பறிக்கும் கொடும் செயல் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு குறிப்பாக கடந்த ஐந்து வருட காலத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பல மடங்கு பெருகி விட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.சமீபத்தில் பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பயிற்சி பெற நடைபெற்ற தேர்வில் தமிழ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் அடியோடு புறக் கணிக்கப்பட்டு, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 300 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது, தமிழக இளைஞர்கள் கண்ணில் சுண்ணாம்பைத் தடவும் நிகழ்வாகும். நூற் றுக்கணக்கான தமிழக இளைஞர்கள் அத்தேர்வில் கலந்து கொண்டும், ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை.கோவை, சென்னை உள் ளிட்ட ரயில்வே அலுவலகங்களிலும் இந்த அநீதி நம் மாநில இளைஞர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப் பட்டு வருகிறது. அந்த அலுவலகங்களில் நடைபெற்ற 2600 நியமனங்களில் 2300 பேர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஏற்கனவே மத்திய அரசின் தபால் துறை பணிகளுக்கு நடைபெற்ற தேர் வில் பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மெகா முறைகேடு வெளிச் சத்திற்கு வந்தது.அது தற்போது சி.பி.ஐ. விசாரணையில் இருக்கிறது. இப்போது குரூப் டி பிரிவிற்கு ரயில்வே தேர்வு வாரியம் நடத்திய தேர்விலும் நம் மாநில மாணவர்களைப் புறக்கணிக்கும் விதத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற் றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கேட்டு ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இந்த நிகழ்வுகள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் வேலை இல்லாத் திண்டாட் டத்தை மேலும் அதிகரிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள், புதிய பணியிடங் கள் எல்லாம் வட மாநிலத்தவருக்கே முழு குத்தகைக்கு விடப்பட்டது போன்ற அவல நிலைமையை மத்தியில் உள்ள பாஜக அரசு திட்டமிட்டு, உள்நோக் கத்தோடு உருவாக்கியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை போனதோடு மட்டுமில்லாமல் பாஜக-வுடன் கூட்டணியும் வைத்து தமிழக இளைஞர்களை வஞ்சித்துள்ளார்.மத்தியில் திமுக கைகாட் டும் அரசு அமைந்தவுடன், தேர்தல் வாக்குறுதிகள் உறுதியாக நிறைவேற்றப்படும். மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது தமிழ்நாட்டில் எடப் பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக இளைஞர்கள் விரோத அரசு வீட்டுக்குப் போகும். தமிழகத்தை வேலை வாய்ப்பில் வஞ்சித்த மத்திய பா.ஜ.க. அரசுக்கும் விடை கொடுக் கப்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

;