tamilnadu

img

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி வழக்கு

சென்னை:
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றத் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் ’வேதா நிலையம்’ இல் லத்தை நினைவு இல்லமாக மாற்றத் தடை கோரி டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்துள் ளார்.அதில், ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு சம்பந்தப்பட்ட காலக்கட்டத்தில் போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், தற்போது அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த வீட்டை சோதனையிட்ட வருமான வரித் துறையினர், அதில் ஒரு பகுதியை சீல் வைத்துள்ளதாகவும் சோதனையின் அடிப்படையில் வருமான வரித்துறை இதுவரை எந்த இறுதி உத்தரவையும் பிறப்பிக்கவில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.இதுதவிர, ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது, அந்த விசாரணை இன்னும் முடிவடையவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. பல விசாரணைகளில் சம்பந்தப் பட்டுள்ள அந்த வீட்டை, அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்ற முடியாது. வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதியைச் சேர்ந்த 108 பேர் ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகக் குறிப் பிட்டுள்ளார்.இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்களன்று (ஜூன் 8) விசாரணைக்கு வருகிறது.

;