tamilnadu

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியம் இல்லை: அமைச்சர்

சென்னை:
தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழ் நாட்டில் தற்போதைக்கு பள்ளிகளை திறக்க சாத்தியமில்லை என்று கூறினார்.முழுமையான கல்விக் கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

;