tamilnadu

விடுதலை திருநாள் வாழ்த்து... 1ம்பக்கத் தொடர்ச்சி

மக்களை பிளவுபடுத்தும் வெறுப்புப்பிரச்சாரம் விதைக்கப்படுகிறது. பெண்கள், குழந்தைகள், சிறுபான்மை மக்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்பு நிலைமக்களுக்கு எதிரானதாக்குதல் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத ஒரு கூட்டத்திடம் ஆட்சிஅதிகாரம் சிக்கிக் கொண்டுள்ள நிலையில், விடுதலைப் போராட்ட வீரர்களின் கனவுகள் சிதைக்கப்படுகின்றன. இருப்பவர்களுக்கும் இல்லாதவர் களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்தியா தன்னுடைய விடுதலையை கொண்டாடும் இந்நாளில் இந்த மகத்தான தேசத்தை பாதுகாக்க அனைத்துப் பகுதி மக்களும் உறுதியேற்க வேண்டும். சுதந்திரம், ஜனநாயகம், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, கூட்டாட்சி, மாநில உரிமைகள், பெண்ணுரிமை, பன்முகத்தன்மை போன்ற அரசியல் சாசனத்தின் விழுமியங்களை பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம். சுதந்திரம் என்பது வெறும் சொல் அல்ல; வாழ்வின் ஒவ்வொரு  நொடியிலும் அதை உறுதிப்படுத்துவதற்கான பெரும் போராட்டத்தை நடத்திட இந்நாளில் சூளுரைப்போம்.

;