tamilnadu

img

துப்புரவு தொழிலாளர்களின் மகத்தான தலைவர்

நமது தோழர்களால் பி,எஸ். என்று அழைக்கப்பட்ட  தோழர்.ப.சண்முகம் புகையிலை தொழிலாளியாக தனது வாழ்க்கை துவங்கியவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு கட்சியின் நகர செயலாளர், மாவட்ட செயலாளர் என பல பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றியவர்.புதுக்கோட்டை நகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த  தொழிலாளர்களை அமைப்புரீதியாக திரட்டி சங்கம் அமைத்து உரிமைகளுக்கான போராட்டங்களுக்கு தலைமையேற்று வழிநடத்தியவர்.
மாநிலம் முழுவதும் உள்ள துப்புரவு தொழிலாளர்களை அணிதிரட்டி அவர்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுத்து செல்ல அமைக்கப்பட்ட உள்ளாட்சி சம்மேளனத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர் தோழர் சண்முகம். தனது வயது முதிர்வையும் பொருட்படுத்தாமல்  தொழிலாளர்களது போராட்டங்களில் பங்கெடுத்து தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியவர்.தமிழக தொழிற்சங்க இயக்கத்தில் குறிப்பிட்டத்தக்கவராக வாழ்ந்து மறைந்த தோழர். சண்முகம் அவர்களது மறைவுக்கு சிஐடியு தமிழ்நாடு  மாநிலக்குழு சார்பில் அஞ்சலி செலுத்துகிறோம்.

சிஐடியு மாநிலத் தலைவர் அ,சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலிருந்து....

;