tamilnadu

img

7.5 விழுக்காடு இடஒதுக்கீடு தீர்மானம் நீர்த்துப் போகச் செய்யும் ஆளுநர்.... மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை:
அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், காலம் தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் ஆளுநர் செயல்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.திமுக தலைவரும் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், “ நாம் எதிர்நோக் கிக் காத்துக் கொண்டிருக்கிற பொதுத்தேர்தல் மிக விரைவில் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான ஆயத்தப் பணிகளில் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.இன்றைக்கு நாட்டின் சூழ் நிலை எப்படி இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். எப்படிப் பட்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும்.

மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சிக்கு அடிமையாக, கூனிக் குறுகி இன்றைக்கு ஒரு சேவகனாக அடிமைத்தனமாக இருந்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. வேறு ஒன்றும் நான் உதாரணம் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்றார்.தமிழ்நாடு ஆளுநர் ஒரு அனுமதி தருவதில் உள்ள சிக்கல் என்ன என்பது உங்களுக்குத் தெரியும். சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தைச் நடத்தினோம். எதற்காக என் றால், ஏழை - எளிய மாணவர் கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு என்னென்ன இடர்பாடுகளை எல்லாம் தந்திட வேண்டுமோ - நீட் தேர்வைக் கொண்டு வந்து மாணவர்களின் மருத்துவப்படிப்பை பாழ்படுத்தி வருகிறார்களோ - அவற்றை ஓரளவிற்குச் சரிசெய்ய வேண்டும் என்பதற்காகத்தான், அரசுப் பள்ளி மாணவர்களுக்காக போராடினோம்.

10 சதவீத இடஒதுக்கீட்டுக் கான பரிந்துரையை நீதியரசர் கலையரசன் அவர்கள் தலைமையிலான குழு அரசிடம் தந்திருந்தாலும், அதையும் இந்த ஆட்சி குறைத்து 7.5 சதவீதம் வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து அதை மசோதாவாக நிறைவேற்றி ஏகமனதாக திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் அதை ஆதரித்து, ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். அனுப்பிவைத்து ஏறக்குறைய நாற்பது நாள்கள் ஆகிவிட்டன.ஆனால், ஆளுநர் இன்னும் அதற்கு ஒப்புதல் தரவில்லை. தருவார், தருவார் என்று காத்திருந்தும் அவர் அனுமதி தரவில்லை.இங்கிருக்கும் அமைச்சர் கள் ஆளுநரைச் சந்தித்துக் கேட்டபோது, அவர் என்ன சொன் னார் என்பதை அமைச்சர்கள் வெளியில் சொல்லவில்லை.அதற்குப்பிறகு ‘7.5 விழுக் காடு இடஒதுக்கீட்டுக்காக நாங் கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு ஒப்புதல் தாருங்கள்’ என்று நானே ஆளுநருக்கு கடிதம் அனுப்பினேன்.

அதற்கு ஆளுநர் அனுப்பிய பதிலில், “நீங்கள் சொன்னதைப் புரிந்துகொண்டேன். ஆனால் அதுகுறித்து பரிசீலித்துத்தான் முடிவெடுக்க முடியும். முடிவெடுக்க 4 வாரங்கள் அவகாசம் வேண்டும்” என்று எழுதியிருந் தார். எப்படியாவது காலம் தாழ்த்தி இதை நீர்த்துப்போகச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் ஆளுநர் இருக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.அதிமுகவின் கொள்கை என்ன, கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது, கமிஷன் கேட் பது. நம்முடைய கொள்கை என்ன? நாட்டுக்காகப் பாடுபடுவது, நாட்டு மக்கள் பிரச்ச னைகளுக்காகப் போராடுவது, உரிமைகளை மீட்கப் போராடுவது.இப்படிப்பட்ட கொடுமையில் இருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்தான். அதை நீங்கள் நல்லவகையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

;