tamilnadu

img

பொதுத்தேர்வு : மாணவர்கள் கல்வித்துறையிடம் ஆலோசிக்கலாம்

சென்னை:
 பொதுத் தேர்வு குறித்த கவலைகளை போக்க கல்வித்துறை ஆலோசனைகளை வழங்கவுள்ளது.கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வு ஜூன் மாதம் 15 ஆம் தேதி தொடங்கி25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  தேர்வுக்கான அனைத்துபணிகளிலும் பள்ளிக்கல்வி துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக கொரோனா ஊரடங்கால் மாணவர்கள் சந்தித்து இருக்கும் பிரச்சனைகள் மற்றும் பொதுத்தேர்வு பயங்களை போக்குவதற்கு தமிழக பள்ளிக்கல்வி துறை, யுனிசெப் மற்றும் நாளந்தாவே அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து ‘டேக் இட் ஈசி’ என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது.

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 9266617888 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுத்தால் போதும், அவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த பல்வேறு விஷயங்களைஎடுத்து கூறவும், தேர்வை எதிர்கொள்வது எப்படி?, தேர்வு குறித்த கவலைகளை போக்குவது எப்படி? என்பது குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கவுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.

;