tamilnadu

img

தமிழகத்தில் விநாயகர் சிலை - ஊர்வலத்திற்கு தடை

சென்னை:
விநாயகர் சதுர்த்தியை யொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கவும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:-

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22.8.2020 அன்று கொண் டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும்,  பொது மக்கள் நலன் கருதியும், பொது  இடங்களில் விநாயகர்சிலைகளை நிறுவுவது அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாட அனுமதி கிடையாது.விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கவும் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க முடியாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்.பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கோ,  சந்தைகளுக்கோ செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அனைத்து இடங்களிலும் தனி மனித இடைவெளியை முறை
யாக கடைப்பிடிக்க வேண்டும்.சிறிய திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும் போது அறிவுறுத்தப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொது மக்களும், திருக்கோவில் நிர்வாகமும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.மேலும், அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து,  உரிய  இடைவெளியை  கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;