tamilnadu

ஐஏஎஸ் அதிகாரியாக ஐந்து பேருக்கு பதவி உயர்வு

சென்னை:
தமிழக அரசின் குரூப்-1 அதிகாரிகள் 5 பேருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணி நிலை உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 31ஆம் தேதிவரை ஏற்பட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் காலியிடத்தை நிரப்புவதற்காக, தமிழக அரசுப் பணியில் உள்ள (குரூப்-1) அலுவலர்கள் 5 பேரை தமிழக அரசு பணியில் ஐ.ஏ.எஸ். பணியிடங்களுக்கு பணிநிலை உயர்த்தி குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயலாளர் மற்றும் பணியாளர்கள் அலுவலர் பி.கணேசன், கலால் வரி துணை ஆணையர் எம்.எஸ்.சங்கீதா, மாநில விருந்தினர் மாளிகை இணை நெறிமுறை அலுவலர் டி.கிறிஸ்துராஜ், வன்னியகுல ஷத்திரிய பொதுநலன் அறக்கட்டளையின் உறுப்பினர் செயலாளர் ஆர்.பிருந்தா தேவி, சிறப்பு டி.ஆர்.ஓ. எம்.அருணா ஆகியோர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிநிலை உயர்வு பெற்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;