tamilnadu

img

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கை... மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை:
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கைக்கு தடை கோரிய மனுவிற்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமைக்குள் (ஆக.6) பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை தொடங்க, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ், அனுமதி பெற வேண்டும்.பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக சட்ட திட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது.

மேலும் இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்குமாறு பொது மக்களை மத்திய அரசு கேட்டுக் கொண் டுள்ளது.இதற்கிடையே, மீனவ அமைப்புக்கள் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி வெளியிட்ட மத்திய அரசு, 11.4.2020-ல் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கையை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அது தொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபணையை தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.பிராந்திய மொழிகளில் அதன் மொழிபெயர்ப்பை வெளியிடாமல், வரைவு குறித்த கருத்துக்கள் மற்றும் ஆட்சேபணைகளை தெரிவிக்கக் கோருவது ஏற்புடையது அல்ல என்பதால், வரைவு அறிக்கை மீதான மேல் நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண் டும், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்” என கோரியுள்ளார்.இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணையில் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வரைவு அறிக்கை நடவடிக்கைக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.
மேலும், இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுவிற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

;