tamilnadu

img

துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

சென்னை:
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் ரத்த அழுத்தம் காரணமாக கடந்த 2 நாட் களுக்கு முன்பு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தேவையான சிகிச்சை அளித்தனர். இதில் அவரது உடல் நிலை தேறியது. இதனால் ஞாயிறன்று(நவ.10) ராயப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்றார். அதன்பிறகு வீட்டுக்குச் சென்ற துரைமுருகனுக்கு மீண்டும் உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மீண்டும் டாக்டர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். இதனால் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட் டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

;