tamilnadu

img

ராணுவ வீரர் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்

சென்னை:
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் மதியழகனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “காஷ்மீர் எல்லையில் அத்துமீறிய பாகிஸ்தான் படைகளை எதிர்த்து நின்று தாய்நாடு காக்கும் மகத்தான பணியில் இன்னுயிர் ஈந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்-தியாகத் தமிழர் மதியழகனுக்கு வீரவணக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக, ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்தவீரர் மதியழகன் வீரமரணம் அடைந்தார்.அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊருக்கு  கொண்டு வரப்படுகிறது.வீர மரணமடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

;