tamilnadu

img

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா தொற்று....

சென்னை
தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமல்லாது அரசுத்துறை உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், எம்எல்ஏ-க்கள், அமைச்சர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை 8 எம்எல்ஏ-க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அமைச்சர் கே.பி. அன்பழகனும் அடங்கும். 

இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.  

;