tamilnadu

img

தமிழகத்தில்  ஒரே நாளில் 59 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை...   

சென்னை 
மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவால் தமிழக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால்   கொரோனா அறிகுறிகள் உள்ள  மாதிரிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழகத்தில் 61,166 மாதிரிகள் பரிசோதனைக்கு வந்துள்ளன. இதில் 59,159 மாதிரிகள் பரிசோதனை செய்ததில் 5,175 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை  மாற்றம் இல்லாமல் 125 ஆக உள்ளது.  

மொத்த அறிகுறி மாதிரிகளின் எண்ணிக்கை  - 29,53,561

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை  - 28,45,462  

;