tamilnadu

img

அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று... 

சென்னை
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கணிக்க முடியாத நாட்கள் பாதிப்பு குறைகிறது. 4 நாட்களுக்கு குறைகிறது. அடுத்த 4 நாட்களுக்கு பாதிப்பு எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயருகிறது. 

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலின் (பெண்  அமைச்சர்)  மகன் மற்றும் மருமகனுக்கு கொரோனா ஏற்பட்டிருந்தது. இதனால் குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருந்த நிலையில்,  நிலோபர் கபிலுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

ஏற்கெனவே அமைச்சர்கள் கேபி அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அமைச்சர் கேபி அன்பழகன் குணமடைந்து தனது பணியை தொடங்கிய நிலையில், மீண்டும ஒரு அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.   

;