tamilnadu

img

பூம்புகார் தொகுதி எம்எல்ஏ பவுன்ராஜூக்கு கொரோனா பாதிப்பு... 

சென்னை
தமிழகத்தில் மக்கள் பிரநிதிகளான எம்எல்ஏ, எம்பி-க்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 2 எம்பி, 22 எம்எல்ஏ-க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 அமைச்சர்களும் அடங்கும். கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் பெரும்பாலானோர் குணமடைந்துள்ள நிலையில், சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ அன்பழகன் உயிரிழந்தார். 

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய நகரான பூம்புகார் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜூகக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. 

;