tamilnadu

img

கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்துக ... சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு

சென்னை:
கல்லூரிகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்றும்  செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் இளநிலை வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கையை முடிக்க வேண்டும் என்றும் சென்னைப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆன்லைன் வகுப்புகள் கல்லூரிகளில் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு வகுப்புகள் மற்றும் எம்சிஏ இரண்டாம் ஆண்டு முதுகலை வகுப்புகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் துவக்கப்பட வேண்டும் என்றும்  இளநிலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் துவக்கப்பட வேண்டும் என்றும்  சென்னை பல்கலைக்கழகம்  உத்தரவிட்டுள்ளது.தனியார் கல்லூரி நிர்வாகங்கள் ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதற்கு பேராசிரியர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். அதேபோன்று வகுப்பு தேர்வுகள், கருத்தரங்கம் ஆகியவற்றை ஆன்லைனில் நடத்தவும் செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் இளநிலை வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கையை முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

;