tamilnadu

img

இடஒதுக்கீட்டின் மீது பாஜக அரசு நடத்தும் நியாயமற்ற தாக்குதல்... மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை:
மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்திடவும், ‘கிரீமிலேயர்’ வருமான வரம்பை ரத்து செய்திடவும், பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் சனிக்கிழமை (ஜூலை 25) வெளியிட்ட அறிக்கை வருமாறு:

ஏற்கெனவே 27 சதவீத இட ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தைக் கூட நிரப்பாமல் வஞ்சித்து, மருத்துவக் கல்வியில் அறவே நிராகரித்து, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்டத்தின்கீழான அடிப்படை உரிமையை விதவிதமாக பாழ்படுத்திவரும் மத்திய பாஜக அரசு, இப்போது ‘கிரீமிலேயர்’ வருமான வரம்பிற்கு நிகர சம்பளத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக வெளிவரும் செய்திகள், இட ஒதுக்கீட்டின் இதயத்தில் ஈட்டிக் கொண்டு பாய்ச்சுவது போல் இருக்கிறது.‘கிரீமிலேயர்’ என்று ஒரு தடைக்கல்லை ஏற்படுத்தி, இட ஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தை விலக்கி வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. 1993-ல் ஒரு லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட கிரீமிலேயருக்குக் கணக்கிடப்படும் வருமான வரம்பு, கடந்த 27 ஆண்டுகளில் 9 முறை உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், 1993-ல் வெளியிடப்பட்ட மத்திய அரசின் அலுவலகக் குறிப்பாணையில் ‘மூன்று வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது தேவைப் பட்டால் மூன்று வருடத்திற்கும் குறைவாகவே கூட ‘கிரீமிலேயர்’ வருமான வரம்பு உயர்த்தப் பட வேண்டும்’ என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டும், இதுவரை நான்கு முறை மட்டுமே கிரீமிலேயருக்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. இது பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் அநீதி ஆகும்.

 தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 2015-ம் ஆண்டிலேயே ‘கிரீமிலேயர் வருமான வரம்பு 15 லட்சம் ரூபாயாக உயர்த் தப்பட வேண்டும்’ என்று தெளிவான பரிந்துரையை வழங்கியிருக்கிறது. அப்போதே பிற்படுத்தப்பட்டோர் சமுதாய நலனுக்கான நாடாளுமன்றக் குழு ‘கிரீமிலேயர் வருமான வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்’ என்று ஒருமனதாகப் பரிந்துரை அளித்துள்ளது.ஆனால், இவை எதையும் கண்டு கொள்ளாமல், பெயரளவுக்கு 6 லட்சமாக இருந்த ‘கிரீமிலேயர்’ வருமான வரம்பை 8 லட்சமாக மட்டுமே உயர்த்தி, பிற்படுத்தப் பட்ட சமுதாய மக்களை, 27 சதவீத இட ஒதுக்கீடு பயனை முழுவதும் அனுபவிக்க விடாமல் மத்திய பாஜக அரசு திட்டமிட்டுத் தடுத்தது.  கிரீமிலேயர் 27 சதவீத இட ஒதுக்கீட்டின் பயனை அடைவதற்குத் தடையாக இருக்கிறது’ என்று மத்திய அரசுக்கு 2015-ல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் தெளிவாகப் பரிந் துரை வழங்கிய போதிலும், சட்டப்பூர்வமான இடஒதுக்கீட் டின் மீது மத்திய பாஜக அரசு நடத்தும் அநியாயமான தாக்குதலை தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக் காது. ஆகவே, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்திடவும், ‘கிரீமிலேயர்’ வருமான வரம்பை ரத்து செய்திடவும்; பிற்படுத்தப் பட்ட சமுதாயத்தின் ஏகப் பிரதிநிதி என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

;