tamilnadu

img

தி.க. தலைவர் கி. வீரமணி மீது தாக்குதல்: மதவெறி கும்பலுக்கு தலைவர்கள் கண்டனம்

சென்னை, ஏப்.5-

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தி.க. தலைவர் கி.வீரமணியின் வாகனம் மீது சனாதனக் கும்பல் தாக்குதல் நடத்தியது.தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இந்து முன்னணியினர் சிலர் உள்ளே நுழைந்து, மேடையை நோக்கி செருப்புகளை வீசியும், திராவிடர் கழகத் தோழர்கள் மீது கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டதில் இருவரின் மண்டை உடைந்து பலத்த காயம் ஏற் பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டி விடும் முயற்சியில் மதவெறி சக்திகள் இறங்கியுள்ளன.இதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் வன்மையாக கண்டித்திருக்கிறார்கள்.மேலும், தி.க. தலைவர் கி.வீரமணிக்கு தமிழக அரசு உரிய பாது காப்பு அளிக்க வேண்டும். இத்தகைய வன்முறையில் ஈடுபட் டோரைக் கைது செய்ய வேண் டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.

;