tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,975 பேருக்கு கொரோனா தொற்று...  ஒரே நாளில் 6 ஆயிரம் பேர் குணமடைந்தனர்...   

சென்னை 
தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தாலும் கடந்த 4 மாத காலமாக கொரோனா "என் வழி தனி வழி" என்ற போக்கில் தான் பயணித்து மக்களை மிரட்டி வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் இன்று (ஆக., 23) ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3,79,385 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 97 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,517 ஆக அதிகரித்துள்ளது. 6,047 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், மாநிலத்தில் இதுவரை கொரோனாவை வென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 3,19,327 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 53,541 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  

சென்னை நிலவரம்  - இன்றைய பாதிப்பு   : 1,298 (மொத்த பாதிப்பு  : 1.25 லட்சம்) 

;