tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கோரோனா தொற்று...  மொத்த பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலான காரியமாக உள்ளது. கடந்த 2 மாதங்களாக தினசரி பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் மின்னல் வேகத்தில் உள்ளது. குறிப்பாக தனி மாவட்டங்களில் பலி எண்ணிக்கை கணிக்கமுடியாத அளவிற்கு உள்ளது. இதனால் தமிழக மக்கள் ஒருவித அதிர்ச்சியில் உள்ளனர்.  

இந்நிலையில், தமிழகத்தில் இன்று (திங்கள்) 5,914 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3 லட்சத்தை (3.02 லட்சம்)  கடந்துள்ளது.  மேலும் 114 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை (5,041) தாண்டியுள்ளது.  சிகிச்சையில் இருந்த 6,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 2,44,675 பேர் கோரோனாவை வென்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.   

;