tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று...  பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியது...   

சென்னை 
தமிழகத்தில் மார்ச் இறுதியில் இருந்து தொடர்ந்து 4 மாத காலம் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும், கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் தான் உள்ளது. நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டுகிறது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.   

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,881 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு  2,45,889 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று (வெள்ளி) ஒரே நாளில் 97 பேர் பலியாகிய நிலையில், மொத்த உயிரிழப்பு 3.935 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சையில் இருந்த 5,778 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தமிழகத்தில் கொரோனாவை வென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 1,83,956 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பில் 31 பேர் மாநிலத்தின் வெளிப்பகுதியில் இருந்து வந்தவர்கள். 

;