tamilnadu

img

விமான நிலையங்கள் தனியார்மயத்திற்கு  மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை:
விமானநிலையங் களை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மாநில உரிமைகளை, தன்னாட்சியை பறிக்கும் செயல் என்று விமர்சித்துள்ளார்.

ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களை பொது-தனியார் கூட்டாண்மை மூலம் குத்தகைக்கு விடுவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய  அமைச் சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார்.இந்நிலையில் விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்த்துள்ளார்.  இதுகுறித்த மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான முடிவானது, மாநில அரசிடமிருந்து அதன் உரிமையையும் தன்னாட்சியையும் பறிப்பதாகும். விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் எந்தவொரு முடிவும் மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டே எடுக்கப்படும் என்ற 2003 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதியை மீறுவதாகும்; இம்முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

;