tamilnadu

img

ஆன்லைன் வகுப்பு விதிமுறையை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை.... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

சென்னை:
ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு விதிமுறைகள் பள்ளிகளில் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும்தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புக்கான விதிமுறைகளை பின்பற்றுவதை எப்படி கண்காணிக்கப்போகிறார்கள்? மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள்? என்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.  இந்நிலையில் ஆன்லைன்வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. மலைவாழ் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி பெறலாம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மாணவர்கள் ஆபாச இணைய
தளங்களுக்குள் நுழைய முடியாது என்பதை உறுதி செய்ய வேண்டும் . ஆன்லைன் வகுப்பு விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அமைப்பு ஏற்படுத்தவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

;