tamilnadu

45,000 வாக்காளர்கள் நீக்கம்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை, மே 8-கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலில்,47 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய மனுவுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலிருந்து 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.ஒக்கி புயல் தாக்கியபோது அரசு பாராமுகமாக இருந்ததால், அப்பகுதி மக்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சம் காரணமாக வாக்காளர் பட்டியலிலிருந்து அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக் கலாம் என மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு இது குறித்துப் பதிலளிக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

;