tamilnadu

img

என்எல்சி வெடிவிபத்து... பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

கடலூர் 
கடலூர் மாவட்டம் நெய்வேலி உள்ள என்எல்சி-யின் இரண்டாவது அனல் மின்நிலையத்தில் இன்று காலை பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே  பேர் பலியாகினர்.

17 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ, 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

;