tamilnadu

img

வனப்பகுதியை ரசிக்க காட்சிமுனை கோபுரம்

ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியின் அழகை ரசிக்க திம்பம் மலை உச்சியில் காட்சி முனை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சமவெளி மற்றும் மலைப்பகுதிகளை உள்ளடக்கிய சத்தியமங்கலம் வனப்பகுதி யில் சுற்றுலா பயணிகளுக்காக இந்த காட்சி முனை கோபுரம் அமைக்கப் பட்டுள்ளது. பைனாகுலர் உதவியுடன், பரந்து விரிந்து கிடக்கும் வனப்பகுதி மட்டுமல்லாது பண்ணாரி அம்மன் கோயில், பவானிசாகர் அணை நீர்த்தேக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்டு ரசிக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளது.  விரைவில் இது பயன்பாட்டிற்கு திறக்க ப்பட உள்ளதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

;