world

img

வெனிசுலாவில் கலவரத்தை துவங்கிய அமெ.கைக்கூலிகள்

கராகஸ், ஜூலை 30-  வெனிசுலா ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக தேர்வான பிறகு ஆட்சியை கவிழ்ப்பதற்காக எதிர்க்கட்சிகள் கல வரத்தை உருவாக்கியுள்ளன.

அந்நாட்டு தலைநகர் கராகஸ் முழுவதும் தீ வைப்புச் சம்பவங்கள், ஆட்சிக் கவிழ்ப்பை தடுப்ப தற்கான காவல்துறையின் பதில்  தாக்குதல் என மிக மோசமான நிலைக்கு சென்று விட்டன.  

தேர்தல் முடிவு அறிவிப்புக்குப் பிறகு மதுரோ வின் வெற்றியில் திருப்தி இல்லை, முடிவுகள் மாற்றப்பட்டு விட்டன என அமெரிக்கா பொய்களை பரப்பியது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க சார்பு ஊடகங்கள் அந்த பொய்யை ஊதிப் பெரிதாக்கி வருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அங்கு கலவரத்தை உருவாக்கியுள்ளன. மதுரோ கடந்த முறை ஜனாதிபதியாக தேர்வான போதும் இதே போன்ற கலவரங்களை எதிர்க்கட்சிகள் உரு வாக்கின. அதனை மக்களின் துணை கொண்டு எதிர்த்து ஆட்சியை மதுரோ தக்க வைத்தார்.     

கலவரம் உருவான பிறகு மக்களிடம் காணொலி  மூலம் உரையாற்றிய மதுரோ, நாம் இது போன்ற தொடர்ச்சியான கலவரங்களையும், ஆட்சிக் கவிழ்ப்பு  நிகழ்வுகளையும் பார்த்து விட்டோம். நம் மீது 100 க்கும் மேற்பட்ட பயங்கர வாத வன்முறைத் தாக்குதல்களை தீவிர வலது சாரிகள் முன்னெடுத்துள்ளனர். 

அவற்றை எப்படி முறியடிப்பது என நமக்குத் தெரியும். தேர்தல் பிரச்சாரங்களின் போதே இவர்க ளின் கலவரங்கள்  குறித்தும் ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சிகள்  குறித்தும் நான் ஏற்கனவே  குறிப்பிட்டுள் ளேன். இந்த கலவரங்களுக்கு பின்னால் அமெ ரிக்காவின் சதித்  திட்டமும் உள்ளது. தீவிர வலதுசா ரிகளின் பாசிசம் நமது மண்ணில் வெற்றி பெற முடியாது அவர்களின் முயற்சிகளை முடியடிப் போம்  என ஜனாதிபதி மதுரோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல இடங்களில் பணத்திற்காக வேலை செய்யும் ஆயுதம் தாங்கிய கூலிப்படைகளும், கிரிமினல் குற்றவாளிகளும் கலவரத்தில் இறங்கி யுள்ளனர். அவர்கள் பல இடங்களில் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களை தடுத்து கைது  செய்யும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.