ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த 24 ஆண்டுகளில் முதல் முறையாக வடகொரியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சைபீரியாவில் உள்ள ராக்கெட் ஏவுதள மையத்துக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்ற வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் உன், ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்து பேசினார்.அப்போது வடகொரியாவுக்கு வருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், பியாங்யாங் விமான நிலையம் சென்ற புடினை, கிம் ஜோங் உன் வரவேற்றார்.
இந்த இரண்டு நாள் பயணத்தில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிரான வடகொரியாவின் நிலைப்பாட்டை தொடர்ந்து ஆதரிப்பதாகவும், அந்நாட்டுடன் தொடர் பொருளாதார மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ரஷ்யா ஒத்துழைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தை முடித்து இன்று வியட்நாமிற்கு புடின் இரண்டு நாள் பயணமாக செல்வதாக ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.