world

img

வங்கதேச மருத்துவமனையில் தீவிபத்து - 3 கொரோனா நோயாளிகள் பலி

வங்கதேச மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி  3பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
வங்கதேச தலைநகர் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக அதிக அழுத்தம் கொண்ட ஆக்ஸிஜன் கருவி வெடித்தது. தீ விபத்தை தொடர்ந்து  நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்றிய போது 3 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
கடந்த ஆண்டு மே மாதம் வேறொரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 நோயாளிகள் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. 
 

;