world

img

இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி உயிரிழப்பு

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தளபதி சுஹைல் ஹுசைனி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதற்காக கடந்தாண்டு அக்.7 ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதலை நடத்த தொடங்கியது. காசா மீது இஸ்ரேல் தொடர்ந்த இனப்படுகொலை யுத்தம் நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் போர் இன்னும் முடியவில்லை.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பின் தலைவரை ஈரானில் வைத்து இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்தது.

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதலை நடத்தியது.

மேலும், லெபானின் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்தும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுஹைல் ஹுசைனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்களை இஸ்ரேல் குறிவைத்து படுகொலை செய்து வருவது போர் பதற்றத்தை மேலும் மேலும் அதிகரித்துள்ளது.