world

உக்ரைன் ரஷ்யா போர் கள நிலவரம்

உக்ரைன் போரில் ரஷ்யாவின் வெற்றி சாத்தியமே எனவும் போர் 2023 வரை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது  எனவும் பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவில் பத்திரிகையா ளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுது  கூறினார். ரஷ்யாவின் வெற்றி குறித்து ஒரு மேற்கத்திய தலைவரின் முதல் மதிப்பீடு இது! 

ரஷ்ய எண்ணெய்க்கு தடை விதிப்ப தால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கும் ஆபத்து உள்ளது எனவும் விலை தாறுமாறாக உயரும் எனவும் அமெரிக்க நிதி செயலாளர் ஜேனட் யெல்லன் அபாய மணி அடித்துள்ளார். இதற்கிடையே ரஷ் யாவின் எண்ணெய் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மரியபோல் நகரில் ஒரு இரும்பாலை யில் சிக்கியிருக்கும் அசோவ் பட்டாலியனின் 20,000 நாஜிக்கள்/உக்ரைன் ராணுவத்தினர்/ வெளிநாட்டு வீரர்கள் சரண் அடைய மீண்டும் ரஷ்யா வாய்ப்பு அளித்துள்ளது. உணவு/நீர் மட்டுமின்றி ஆயுதங்களும் குறைவாக அவர்களிடம் உள்ளதாக இடைமறித்த ரேடியோ செய்திகள் கூறுகின்றன.  ஆனால் உக்ரைன் அரசாங்கம் சரண் அடைய அனுமதி மறுக்கிறது.

ரஷ்யப் படையெடுப்பால் 550 பில்லி யன் டாலர் மதிப்புள்ள பாதிப்புகள் ஏற் பட்டுள்ளதாகவும் மாதம் ஒன்றுக்கு 7 பில்லியன் (பில்லியன்=100 கோடி) டாலர் கள் மேற்கத்திய நாடுகள் உதவி தர வேண் டும் எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்துள்ளார். 

உக்ரைனில் ரஷ்யா இனப்படு கொலை செய்வதாக உக்ரைனும் அமெரிக்காவும் குற்றம் கூறின. ஆனால் இந்த வரையறுப்பை ஏற்க ஐ.நா. மறுத்து விட்டது. இதனை ஐ.நா. அதிகாரி ரவிணா ஷம்தாசனி தெரிவித்தார்.

ஜெர்மனியில் அரசாங்கத்தால் தங்க வைக்கப்பட்டிருந்த ஆப்கன் அகதிகளை அப்புறப்படுத்திவிட்டு அந்த இடங்களில் உக்ரைன் அகதி கள் தங்க வைக்கப்பட்டனர் என ஃபாரின் பாலிசி எனும் மேற்கத்திய பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. ஐரோப்பியர் கள் எனில் உயர்வு; ஆசியர்கள் எனில் தாழ்வு. இதுவே ஐரோப்பாவின் நிலை!

ஏப்ரல் மாதம் 26 அன்று ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்ட ரஸ் ரஷ்யா செல்கிறார். ஜனாதிபதி புடின், வெளியுறவு அமைச்சர் லாவ்ரவ் ஆகியோரை சந்திக்கத் திட்டமிட்டுள் ளார்.

ரஷ்ய எண்ணெய்க்கு ரூபிளில் பணம் தர இயலாது என பிடிவாதம் பிடித்து வந்த ஐரோப்பிய நாடுகளில் சில இப்பொழுது மறைமுகமாக ரூபிளில் தர முன்வந்துள்ளன என கூறப்படு கிறது. எல்லாம் எண்ணெய்யும் இயற்கை எரிவாயுவும் படுத்தும் பாடு!

வெளிநாடுகளில் முடக்கப்பட்ட ரஷ்யாவின் பணம் மற்றும் சொத்துக்களை உக்ரைனுக்கு உதவிட பயன்படுத்தலாம் என போலந்து ஆலோ சனை கூறியுள்ளது. 

உக்ரைனின் கார்கவ் பகுதியில் பலாகேலியா எனும் 25,000 பேர் வசிக்கும் சிறு நகரத்தை ரஷ்யா  மார்ச் மாதம் கைப்பற்றியது. தனது மக்களை பாதுகாக்க அதன் மேயர் ரஷ்ய படைக ளுக்கு ஒத்துழைப்பு அளித்தார்.  மக்களு க்கு ரஷ்ய நிவாரணப் பொருட்களும் கிடைத்தன. ஆனால் உக்ரைன் அரசாங் கம் இவர் மீது தேசத் துரோகக்  குற்றச் சாட்டு சுமத்தியுள்ளது.