world

img

அணிசேரா நாடுகளில் கலகம் செய்யும் அமெரிக்கா

மாஸ்கோ, ஜூன் 28- அணிசேரா நாடுகளில் நடக்கும் கலகங்களுக்கு அமெரிக்கா ஆதரவு தந்து கொண்டிருக்கிறது என்று ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனில் இருக்கும் ரஷ்ய ஆதரவுப் படை வாக்னர் குழுவின்  தலைவரான யெவ்ஜெனி பிரிகோ சின், ரஷ்யாவுக்கு எதிராகத் திடீ ரென்று குரல் கொடுத்தார். கலகம் செய்துவிட்டார், புடினின் செல்வாக்கு சரிவு என்றெல்லாம் மேற்கத்திய ஊடகங்கள் எழுதி  வருகின்றன. வாக்னர் குழுவின் எதிர்ப்புக் குரல் பற்றிப் பேசியபோது தான், கலகங்களுக்கு அமெரிக்கா பெரிய அளவில் ஆதரவு தந்து வரு கிறது என்று லாவ்ரோவ் குற்றம் சாட்டினார்.  வாக்னர் குழு எதிர்ப்புக் குரலை எழுப்பியவுடன் பெலாரஸ் ஜனாதிபதியான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, பிரிகோசினைத் தொடர்பு கொண்டு பேசியிருக் கிறார். தங்கள் முகாம் மீது ரஷ்யா வின் ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக அவர் அப்போது குற்றம்சாட்டி யிருக்கிறார். இந்த ராக்கெட் தாக்கு தலுக்கு ரஷ்யாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு தான் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தக் குற்றச்சாட்டை  ரஷ்யத்தரப்பு மறுத்துள்ளது. அந்த முகாம் மீது தாங்கள் தாக்குதல் எதையும் நடத்தவில்லை என்று  அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்கள். லுகாஷென்கோ நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரிகோசின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக ரஷ்யா அறி வித்திருக்கிறது. பிரிகோசின் பத்திரமாக பெலாரசுக்கு அனுப்பி  வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரோடு எதிர்ப்புக் குரல் எழுப்பிய வாக்னர் குழுவின் சில உறுப்பினர்கள் மீதும்  குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் படாது என்று சமாதானப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு ரஷ்யத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற நாடுகளில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது இரட்டை நிலையை அமெரிக்கா கடைப்பிடிக்கிறது. தங்கள் பேச்சைக் கேட்காத அரசு களைக் கவிழ்ப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள். அந்த அரசுகளைக் கவிழ்ப்பதற்குத் தனது ஆதரவைத் தருகிறது. ஆனால், தங்கள் சொல் கேட்டு செயல்படும் ஆட்சிகளுக்கு எதிர்ப்பு வருகையில், எந்தவித ஆட்சி மாற்றமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதில் இறங்கி விடுகிறார்கள். யார் ஆட்சியில் இரு க்கிறார்கள் மற்றும் யார் ஆட்சியைத் தூக்கி எறியப்பார்க்கிறார்கள் என்பதைப் பார்த்துதான் அமெரிக் கா தன் நிலைபாட்டை வைக்கும் என்று லாவ்ரோவ் சுட்டிக்காட்டுகிறார்.

உக்ரைன் - ஏமன் 

2014 ஆம் ஆண்டில் உக்ரைன்  ஜனாதிபதியாக இருந்த யானு கோவிச்சைப் பதவியில் இருந்து வெளியேற்ற அனைத்து வேலை களையும் அமெரிக்கா செய்தது. உக்ரைனை விட்டு யானுகோவிச் வெளியேற வேண்டிய அளவுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் ஐரோப்பிய யூனியன் ஏற்பாடு செய்த உடன்பாட்டில் கையெழுத்திட்ட சில மணி நேரங் களுக்குள் வன்முறை கடுமையாக கட்டவிழ்த்து விடப்பட்டது. அவர் பத வியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது நடந்து ஓராண்டுக்குப் பிறகு ஏமனில் ஆட்சி மாற்றம் நிகழ்ந் தது. அமெரிக்காவின் பொம்மை ஆட்சியாளரான அப்ரப்பு மன்சூர் ஹாடி, மக்களின் எதிர்ப்பு தாங்கா மல் சவூதி அரேபியாவுக்கு ஓடினார். அப்போதிருந்து, அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் நோக்கத்தில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமன் மீது தாக்கு தல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா தனது முழுமையான ஆதரவைத் தந்து வருகிறது.  மோல்டோவாவில் மக்கள் கிளர்ச்சி செய்தபோது, அப்போ தைய ஆட்சியாளர் மரியா சண்டு, அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்தார். இதனால் கிளர்ச்சிக்கு எதி ராக அமெரிக்கா இருந்தது. அதே வேளையில், ஜார்ஜியாவில் எதிர்க் கட்சித் தலைவரான மிக்கைல் சாகஸ்விலியின் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தியபோது, அதற்கு அமெரிக்காவின் ஆதரவு  கிடைத்தது. அப்போது ஜார்ஜியா வில் இருந்த ஆட்சியாளர்கள் அமெ ரிக்கா காட்டிய வழியில் நடக்காததே அதற்குக் காரணமாக இருந்தது.  இந்த அனைத்து சம்பவங்களையும் சுட்டிக்காட்டி செர்ஜி லாவ்ரோவ், ரஷ்ய எதிர்ப்பாளர்களுக்கும் அமெ ரிக்கா ஆதரவு தந்து வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.