world

img

மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக போரட்டம்: துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி

மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனா்.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த பொது தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சியை மியான்மர் ராணுவம் கவிழ்த்தது. இதனால் மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகிறது.
இதில், ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் பலர் படுகாயம் அடைந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனா்.

;