world

img

காலத்தை வென்றவர்கள் ; சிலியின் கவிக்குயில் பாப்லோ நெரூதா பிறந்த நாள்....

பாப்லோ  நெரூதா எனும் மாபெரும் கவிஞர்  சிலி நாட்டில் 1904 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் நாள் பிறந்தார். இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர். கவிஞராகவும், சமூக உணர்வு கொண்ட போராளியாகவும், மார்க்சியத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர்.1920 ஆம் ஆண்டு கவிதை எழுதுவதற்காக, செக்கோஸ்லாவாகியா எழுத்தாளரான ஜோன் நெருடாவின் பெயரால் உந்தப்பட்டு, பாப்லோ நெருடா என்ற புனைபெயரினை ஏற்றுக்கொண்டார். பாப்லோ என்பது ஸ்பானிஷ் மொழியில் பால் என்பதன் வடிவமாகும்.

தமிழில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடிய கணியன் பூங்குன்றனார் போலவே நெரூதாவும் “பூமியின் தோல் உலகெங்கும் ஒன்றேதான்” என்று பாடியவர். 1953ஆம் ஆண்டு லெனின் அமைதிப் பரிசைப் பெற்றவர்.1964ஆம் ஆண்டு பிரெஞ்சு தத்துவவாதியான ழான் பால் சாத்தர், நோபல் பரிசு வேண்டாம் என்று சொல்லி மறுத்ததற்கு ஒரு காரணம், அந்த  ஆண்டு பாப்லோ நெரூதாவிற்குப் பரிசு கொடுத்திருக்க வேண்டும் என்பது. ஆயினும் 1971ஆம் ஆண்டு தான்பாப்லோ நெரூதாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. “இருபதாம் நூற்றாண்டின் உலக மொழிகள் எல்லாம் கண்ட மாபெரும் கவிஞர் இவரே” என்று லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகிய கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், நெரூதாவைப் புகழ்கின்றார்.

 

;