world

img

பிரேசில் கடந்த 24 மணி நேரத்தில் 90,570 பேருக்கு கொரோனா பாதிப்பு

பிரேசிலில் ஓரே நாளில் 90,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேசிலில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 90,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,71,390 ஆக அதிகரித்துள்ளது. 
மேலும் , ஒரே நாளில் 2,185 பேர் கொரோனா பாதிப்பில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,90,314 ஆக உயர்ந்துள்ளது. 

 
 

;