world

img

பிரேசில் : 4 வது சுகாதார அமைச்சர் நியமனம்

பிரேசிலில் 4- வது சுகாதார அமைச்சராக டாக்டர் மார்செலோ குயிரோகா மாற்றப்பட்டுள்ளார்.
பிரேசிலில் கொரோனா பரவல் மிகவும் மோசமடைந்துள்ளது. அங்குக் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக  44,120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 1,111 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அங்கு 1,14,83,370 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 2,78,327 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் பிரேசிலில் புதிய சுகாதார அமைச்சராக டாக்டர் மார்செலோ குயிரோகா நியமனம் செய்யப்பட்டார். இவர் பிரேசிலில் இருதயவியல் சங்கத்தின் தலைவராக உள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரேசிலின் முன்னாள் சுகாதார அமைச்சர் லூயிஸ்ஹென்ரின் மாண்டெட்டா பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக நெல்சன் டீ நியமிக்கப்பட்டார். ஆனால் இவரும் சில வாரங்களிலேயே ராஜினாமா செய்தார். பின்னர் பஸீல்லோ இடைக்கால அமைச்சரானார்.
 

;