world

img

உருமாறிய கொரோனா தொற்றுக்கு சிறந்த தடுப்பு மருந்து பைஸர் - ஆய்வில் தகவல் 

 

பிரிட்டன், தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றுக்கு எதிராக பைஸர் கொரோனா தடுப்பு மருந்து சிறப்பாக செயல்படுகிறது என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில், தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவே காணப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா தொற்று 44 நாடுகளிலும், பிரேசிலில் கண்டறியப்பட்ட உருமாற்றமடைந்த கொரோனா தொற்று 15 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று விரைவாக உருமாற்றம் அடைந்து வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், உலக நாடுகள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். மேலும் பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்க கொரோனா தொற்றுக்கு எதிராக பைஸர் கொரோனா தடுப்பு மருந்து சிறப்பாக செயல்படுவதாக ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தரப்பில், “ பைஸர் கொரோனா தடுப்பு மருந்தின் இரு டோஸ்கள் புதிய வகை கொரோனா தொற்றுக்கு எதிராக சிறந்த முறையில் செயலாற்றி, எதிர்ப்பு சக்தியை தூண்டுகின்றது. ஒரு டோஸ் பைஸர் தடுப்பு மருந்து பிரிட்டனில் தோன்றிய புதிய வகை கொரானாக்கு எதிராக நல்ல பலனை அளிக்கின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

;