world

img

எரிகிறது பிரான்ஸ்

பாரீஸ், ஜூலை 1- பிரான்ஸில் 17 வயது சிறுவனை போலீ சார் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து, நாடு  முழுவதும் பெரும் கொந்தளிப்பும், வன் முறையும் பரவியுள்ளது. பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் அருகே  கடந்த செவ்வாயன்று நஹேல் என்ற 17  வயது சிறுவனை போலீசார் ஒருவர் சுட்டுக்கொன்றார். பஸ் செல்லும் பாதை யில் மெர்சிடஸ் காரில் வேகமாக சென்ற தால் தான் நாஹெல் சுட்டுக் கொல்லப்பட் டார் என்று போலீசார் விளக்கம் அளித்த நிலையில், நஹேலின் தாயார், “நான் ஒட்டுமொத்த காவல்துறையையும் குறை கூறவில்லை. என் மகனின் உயி ரைப் பறித்த அந்த ஒரு நபரை மட்டும்தான்  குறிப்பிடுகிறேன். அந்த நபர் ஓர் அரபு முகத்தைப் பார்த்தார், உயிரைப் பறிக்க நினைத்தார்” என்று வேதனையோடு கூறி னார்.  நஹேல் தாயாரின் பேட்டி மற்றும் நஹேலைச் சுடும் வீடியோ சமூக வலை தளங்களில் தீயாய் பரவின. அடுத்த சில  மணிநேரங்களில் இனபாகுபாடு காரண மாக நஹேல் சுட்டுக்கொல்லப்பட்டார் என  செய்திகள் பரவி, நஹேல் சுட்டுக்கொல் லப்பட்ட இடத்தில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.  போராட்டத்தைக் கட்டுப்படுத்த சம்பவ  இடத்திற்கு பாரீஸ் போலீசார் நுழைய வெடித்தது கலவரம். போலீசாருடனான  மோதலில் கடைகள், வாகனங்கள் கொளுத்தப்பட்டன. தொடக்கத்தில் பாரீஸ் வட்டத்திற்குள் கலவரம் அரங் கேறிய நிலையில், தற்போது பிரான்ஸ் நாட்டின் மூன்றாவது பெரிய நகரான  லியோன் மற்றும் மார்செய்ல்லி,  டவ்லவ்ஸ், ஸ்ட்ராஸ்போர்க், லில்லி போன்ற முக்கிய நகரங்களுக்கும் கொந்த ளிப்பு பரவியுள்ளது.  வன்முறையை கட்டுப்படுத்த சனி யன்று சுமார் 45,000 காவல்துறை அதிகாரி கள் பிரான்சின் ஒவ்வொரு மூலை முடுக்கி லும் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 1,100க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யார் இந்த நஹேல்?

தன்னுடைய தாய்க்கு ஒரே மகனான  நஹேல் வடஆப்பிரிக்க வம்சாவளியைச்  சேர்ந்தவராவார். இவர் அல்ஜீரியாவிலி ருந்து புலம் பெயர்ந்தவராவார். நஹேல்,  டேக் அவே டெலிவரி டிரைவராக (takeaway delivery driver) பணியாற்றி யிருக்கிறார். ரக்பி விளையாட்டு கிளப்பில் தீவிர உறுப்பினராகவும் நஹேல் பணி யாற்றியுள்ளார்.