world

img

தென்கிழக்கு பிரான்சில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 2 பேர் பலி

தென்கிழக்கு பிரான்சில் சவோய் துறையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
தென்கிழக்கு பிரான்சில் சவோய் துறையில் கோர்செவெல் கம்யூனில் 1900 மீட்டர் உயரத்தில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 5 பேர் பயணித்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
இதுகுறித்து விமானத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;