world

img

பிரான்ஸ் தொழிலாளர் வர்க்கமே, போராட்டத்திற்கு தயாராகுக!

பாரீஸ், ஜூலை 11 - இடதுசாரிகளின் வெற்றியை அபகரிக்க முயற்சிக்கும் எந்த  நடவடிக்கையையும் நாம் அனு மதிக்கக் கூடாது. நமது வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் போராட்டத்திற்கு தயாராகுங்கள் என பிரான்ஸ் தொழி லாளர்களுக்கு அந்நாட்டு தொழிற் சங்கங்கள் அறைகூவல்விடுத்துள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகளின் கூட்டணி அதிக இடங்களை வென்று முதலிடத்தில் உள் ளது. எனினும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் இடதுசாரி கூட்டணியை ஆட்சி அமைக்கவிடாமல் செய் வதற்கான அனைத்து சூழ்ச்சிகளையும் தற்போதைய ஜனாதிபதி மக்ரோன் செய்து வருகிறார்.  

மேலும் ஜூலை 18 அன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம் கூடும் போது தங்களை ஜனநாயக வாதிகளாக கருதுகிற அனைத்துக் கட்சி களும், பிரான்சின் சுதந்திரம், சட்டம், நாடாளுமன்ற ஜனநாயகம், ஐரோப் பிய ஒன்றியத்தின் எதிர்காலம் என அனைத்தையும் கருத்தில் கொண்டு ஒரு முழுமையான பெரும்பான்மை யை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்

இதனை தொடர்ந்து இடதுசாரி களின் வெற்றியைப் பறிக்க நடக்கும் எந்த முயற்சியையும் அனுமதிக்கக் கூடாது என பிரான்ஸ் நாட்டின் தொழி லாளர் கூட்டமைப்பின் ரயில்வே தொழி லாளர் பிரிவு அறைகூவல் விடுத்துள் ளது. மேலும் அவர்கள் வெளியிட் டுள்ள அறிக்கையில், “மக்களின் தீர்ப்பு  மதிக்கப்பட வேண்டும். மக்கள் தீர்ப்பை உறுதிப்படுத்த பிரான்ஸ் நாட்டின் தொழிலாளர் வர்க்கம் போராட்டப் பேரணிகளில் பங்கேற்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்துள்ளது. மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மக்ரோன் முன்வரவில்லை என்றால் ஜூலை 26 அன்று துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டியின் போதும் எங்கள்  போராட்டம் தொடரும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

மக்களின் தீர்ப்பை மக்ரோன் மதிக்கவில்லை என இடதுசாரிக் கூட்ட ணியும் கடுமையாக விமர்சித்துள்ளது. தற்போது இடைக்கால பிரதமராக பதவி நீட்டிக்கப்பட்டுள்ள கேப்ரியல் பதவி விலக வேண்டும்; ஜனாதிபதி மக் ரோன் தனது பதவியின் ஜனநாயகக் கடமையை மதித்து மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் முன்னணியில் உள்ள இடதுசாரிக் கூட்டணியில் இருந்து பிரதமரை தேர்வு செய்ய வேண்டும்; மக்ரோன் பிரான்சுக்கு செய்யும் ஒரு நன்மை இருக்குமென்றால் அது இடதுசாரிக் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுவதுதான் என வும் மக்கள் முன்னணியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வாகியுள்ள இடதுசாரி எம்.பி.க் களும் கட்சித் தலைவர்களும் கருத்துக் களை தெரிவித்துள்ளனர்.