uகாசாவில் இஸ்ரேல் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,000ஐ தாண்டியது. 4156 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அல் அமல் மருத்துவமனை தாக்கப்பட்ட பொழுது 5 நாட்களே ஆன ஒரு சிசுவும் கொல்லப்பட்டது என ஐ.நா.அதிகாரி ஜெம்மா கொன்னோல் தெரிவித்துள்ளார்.
uகாசா பகுதியில் 300 மசூதிகளும் 3 முக்கிய தேவாலயங்களும் அழிக்கப்பட்டுள்ளன. பிரார்த்தனைக்கான வாய்ப்புகள் அழிக்கப்பட்டதன் விளைவாக காசா மக்களுக்கு இது உளவியல் ரீதியான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என பலர் கவலை தெரிவித்துள்ளனர். அது உண்மையான தீர்வு இல்லை என்றாலும் சாதாரண காலத்திலேயே மக்களுக்கு தமது துன்பங்களை மறக்க மத பிரார்த்தனை தேவைப்படுகிறது. போர் காலத்தில் அதன் தேவை அதிகரித்துள்ளது.