world

காசா மீது இஸ்ரேல் போர்: சில முக்கிய கள நிகழ்வுகள்

u இதுவரை இஸ்ரேலின் குண்டுவீச்சில் கொல்லப் பட்ட காசா மக்களின் எண்ணிக்கை 25,100ஐ தாண்டியது. மேலும் 7,000 பேர் இடிபாடுகளில் சிக்கிமீட்கப்படாமல் உள்ளனர். 62,300 பேர் காயமடைந் துள்ளனர். 

u பாலஸ்தீனப் பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் சவூதி அரேபியா இஸ்ரேலுடன் ராஜிய உறவை ஏற்படுத்திக் கொள்ளாது என வெளியுறவு அமைச்சர் ஃப்ர்ஹான் அல் சவுத் கூறியுள்ளார். இது வரவேற்கப்பட வேண்டியஒன்று. அதே சமயத்தில் இஸ்ரேலுடன் வணிக உறவுகளையும் தற்காலிகமாக நிறுத்தினால் பாலஸ்தீனத்துக்கு உதவியாக இருக்கும். சவூதி அரசு செய்யுமா?

u மூன்று வாரங்களுக்கு பிறகு நேதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய பின்னர் ஜோ பைடன்பாலஸ்தீன தேசத்துக்கு இஸ்ரேல் ஆதரவளிக்கும் என தான் நம்புவதாக கூறினார். ஆனால் நேதன்யாகு பாலஸ்தீன தேசம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்படாது என கூறியுள்ளார். உலகின் வலிமையானதேசத்தின் ஜனாதிபதி பைடன் பொய் சொல்கிறா ரா?அல்லது சிலர் விமர்சிப்பது போல அவரது வயது மூப்பு காரணமாக மூளையின் செயல்பாடும் கவனிக்கும் திறனும் குறைந்துகொண்டு வருகிறதா?

u ஹமாசை முற்றிலும் ஒழிப்பது எனும் இலக்கின்அருகில் கூட இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகள் செல்ல இயலவில்லை என அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது என்பதை வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

u சமீபத்தில் இஸ்ரேலில் சேனல் 13 எனும் ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் நேதன்யாகுவின் செல்வாக்கு தொடர்ந்து சரிவு நிலையிலேயே உள்ளது என்பது வெளிப்பட்டுள்ளது. ஹமாசுடன் பேச்சு வார்த்தை நடத்திபணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதில் 35சதவீதம் ஆதரவு; 46சதவீதம் எதிர்ப்பு; 19சதவீதம் கருத்து கூறவில்லை என வெளிப்பட்டுள்ளது. நாட்கள் நீடிக்கும் அதே வேளையில் தொடர் போருக்கு ஆதரவு குறைவது நடக்கிறது.