world

காசா மீது இஸ்ரேல் போர்: சில முக்கிய கள நிகழ்வுகள்

u சிரியாவில் உள்ள அமெரிக்கா தளங்கள் மீது 100க்கும் அதிகமான தாக்குதல்களை பாலஸ்தீன ஆதரவு குழுக்கள் நடத்தியுள்ளன. எனவே பாதுகாப்புக்காக அமெரிக்க படைகள் சுற்றுமுறையில் இடம்மாற்றப்படுகின்றனர். எனினும் பாலஸ்தீன ஆதரவு குழுக்களின் தாக்குதல்கள் ஓயவில்லை. 

uஇஸ்ரேலிய பிரதமர் நேதன்யாகு சாதிக்க முடியாத இலக்குகளை உருவாக்கி தோல்வி அடைந்துள்ளார்; இது இஸ்ரேலுக்கு பின்னடைவை உருவாக்கியுள்ளது  என முன்னாள் பிரதமர் ஓல்மெர்ட் குற்றம் சாட்டியுள்ளார். 

uஐ.நா.வின் அகதிகள் உதவி பிரிவை ஆதரிக்க வேண்டியது தனது கடமை என நார்வே/ அயர்லாந்து ஆகியநாடுகள் அறிவித்துள்ளன. ஆனால் அந்த அமைப்பின் ஊழியர்கள் ஹமாசுக்கு உளவு பார்த்தனர் என குற்றம்சாட்டி அமெரிக்கா/ பிரிட்டன்/ ஜெர்மனி/ ஆஸ்திரேலியா/ கனடா/ பின்லாந்து போன்ற பல நாடுகள்உதவியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதன் விளைவாக இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஐ.நா.சபை முடிவு செய்துள்ளது. 

uஹிஸ்புல்லா ஹமாசைவிட வலிமையானது; அதனிடம் உள்ள ஆயுதங்கள் ஆபத்தானவை; இஸ்ரேலை பின்னுக்கு தள்ளிவிட்டது ஹிஸ்புல்லா என இஸ்ரேல் உளவுத்துறை முன்னாள் அதிகாரி டிவிர் கரோவ் சேனல் 13 எனும் ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

uலெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவுடன் முழு போர் தொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை தவிர்க்குமாறு கூறிய அமெரிக்காவின் அறிவுரையை இஸ்ரேல் புறம்
தள்ளுவதாக கூறப்படுகிறது. 

uபிரிட்டனில் உள்ள பர்க்லேஸ் வங்கி இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அந்த வங்கி முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

uகாசாவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை126ஆக உயர்ந்துள்ளது என ஊடக  அமைச்சகம் கூறியுள்ளது.

uஉலக சுகாதார அமைப்பின் தலைவர்டாக்டர் டெட்ரோ அதோனம் கேப்ரியசஸ் காசா பற்றி விவாதிக்கும்பொழுது வார்த்தைகள் வெளியே வராமல் திணறினார். கண்ணீர்விட்டார். தீர்வுக்கு மனம் இருந்தால் தீர்வ கிடைக்கும் எனவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். 

uஇரு நாட்களுக்கு முன்பு ஜோர்டான்- சிரியா- இராக் தேசங்களின் எல்லையில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது நடந்த டிரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 32 பேர் காயம்! இந்த தினம் 
அமெரிக்காவிற்கு மிக கடினமான நாள் என ஜோ பைடன் கூறியுள்ளார். இதற்கு பழி தீர்க்காமல் விட மாட்டோம் என ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின்எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் வான்வெளி தாக்குதல் பாதுகாப்பு வளையத்தையும் மீறி இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஆத்திரத்தில் பொங்கும் அமெரிக்காவின் தாக்குதல்கள் வரும் நாட்களில் வெளிப்படும். இஸ்ரேல் காசா மீது தொடுத்துள்ள போர் பல ஆபத்தான சிக்கல்களை உருவாக்கிக் கொண்டுள்ளது. 

uசர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலை விமர்சித்த பின்னரும்  தமது நிலையில் எந்த மாற்றமும் இல்லை; இஸ்ரேலுக்கு ஆயுதங்களை தருவது தொடரும் என அமெரிக்கா கூறியுள்ளது.

uஇரண்டே மணி நேரத்தில் ஹிஸ்புல்லா இஸ்ரேலின் தலைநகரம் டெல் அவிவ் மீது 1000 ஏவுகணைகளை வீசி பெரும் நட்டத்தை ஏற்படுத்த முடியும் என இஸ்ரேலிய ஊடகங்கள் எச்சரித்துள்ளன. ஹிஸ்புல்லா மீது தாக்குதல் தொடுக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது எனும் பின்னணியில் இந்த எச்சரிக்கை!

uஅமெரிக்காவிலும் ஏனைய இடங்களிலும் நடக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் காரணம் என அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பொலாசி கூறியுள்ளார். அமெரிக்காவில் எது நடந்தாலும் அதற்கு காரணம் புடினும் சீனாவும் என இவர்கள் பொய் கதைகளை கூறுகின்றனர். அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்!
uஹமாஸ் உருவாக்கிய பூமிக்கு அடியில் உள்ள ராணுவ கட்டமைப்புகள் இன்னும் 80 சதவீதம் அப்படியே உள்ளது என அமெரிக்க பத்திரிகை வால் ஸ்டிரீட் ஜேர்னல் கூறியுள்ளது. 112 நாட்கள் இஸ்ரேல் தாக்குதலுக்கு பின்னரும் இதுதான் நிலை!

uஐ.நா. வுக்கு தரும் உதவிகளை பல மேற்கத்திய நாடுகள் நிறுத்துவதை அரேபிய லீக் கண்டித்துள்ளது. காசா மக்களை பட்டினி போடுகிறது இஸ்ரேல் என சவூதிஅரேபியா கண்டித்துள்ளது. இப்படிப்பட்ட அறிக்கைகளை பார்த்து இஸ்ரேல் கவலைப்படுமா என்ன?

uஇஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதி மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு குறித்து விவாதிக்க அரேபிய லீக்கூடுகிறது. உருப்படியான முடிவு வெளிவருமா? அல்லது
வழக்கம்போல அறிக்கை மட்டும்தான் வெளி வருமா?