uகாசா மக்கள் அனைவருமே சமீப கால வரலாற்றில் கேள்விப்படாத அளவுக்கு துன்பங்களை சந்தித்து தாங்கிக் கொண்டு வருகின்றனர் என ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டெரஸ் கூறியுள்ளார்.
uஇஸ்ரேலின் சட்டப்பூர்வ தாக்குதலின் இலக்கு ஈரான் என இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் கூறியுள்ளார். போரை விரிவுபடுத்துவதன் மூலம்தான் அமெரிக்காவை ஈடுபடவைக்க முடியும் எனவும் அதுதான் தங்களுக்கு பலன் தரும் எனவும் இஸ்ரேல் அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர்.
uகாசா மீது அணு ஆயுதங்களை வீசுவது தவறு இல்லை என மீண்டும் இஸ்ரேலிய அமைச்சர் அமிச்சாய் எலியாகு வன்மம் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இது போல பேசி உலகின் கண்டனங்களை பெற்ற இவர் மீண்டும் இவ்வாறு பேசுவது இஸ்ரேல் தோல்வி முகத்தில் உள்ளதா எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.
u50க்கும் அதிகமான ராணுவப் பணிக்கு அழைக்கப்பட்ட இஸ்ரேலிய பெண் வீரர்கள்எல்லைப் பகுதிகளுக்கு செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஒய்நெட் எனும் இஸ்ரேலிய பத்திரிகை கூறியுள்ளது.
uஇராக்கில் உள்ள பாலஸ்தீன ஆதரவு போர்க்குழுக்கள் தாங்கள் இஸ்ரேலுக்கு எதிரான போரில் இரண்டாவது கட்டத்துக்கு மாறியுள்ளதாக அறிவித்துள்ளனர். இதில்மத்திய தரைக்கடலில் இஸ்ரேல் நோக்கி வரும் கப்பல்களை முடக்குவதும் இஸ்ரேலின் முக்கிய துறைமுகங்களை தாக்குவதும் அடங்கும் என அறிவித்துள்ளனர். ஏற்கெனவே செங்கடலில் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. மத்திய தரைக்கடலிலும் தாக்குதல் நடந்தால் இஸ்ரேல் மேலும் இழப்புகளை சந்திக்கும்.
uஆஸ்திரேலியாவில் காது கேட்காத/ பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் பாலஸ்தீன ஆதரவு பேரணியை நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. எனினும் இவர்களின் கோரிக்கையை உணரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் இல்லை என்பது வேதனையான ஒன்று!
uஐரோப்பிய ஒன்றியம் ஏமனின் மீது தாக்குதல் நடத்தாது என ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இந்த பிரச்சனையிலாவது ஐரோப்பா, அமெரிக்காவின் நிலையிலிருந்து மாறுபட்டிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான்! ஐரோப்பிய கப்பல்களை தாக்குவது இல்லை என ஏமன் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
uபடுகாயமுற்ற 100 பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க இத்தாலி முன்வந்துள்ளது. இதனை அந்த நாட்டின்ராணுவ அமைச்சர் வெளிப்படுத்தி யுள்ளார்.
uஏமனின் ஹவுதி அமைப்பினர் செங்கடலில் இரண்டு மணி நேரம் அமெரிக்க போர்க் கப்பலுடன் போரிட்டதாக ஏமன் ராணுவத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் விளைவாக இரண்டு அமெரிக்க வணிகக்கப்பல்கள் செங்கடலிலிருந்து திரும்பி விட்டன எனவும் கூறினார். இது உண்மை எனில் மிகப்பெரிய கப்பற்படை வைத்திருக்கும் அமெரிக்காவின் பெருமைக்கு இது ஒரு கரும்புள்ளி.uகாசா மக்கள் அனைவருமே சமீப கால வரலாற்றில் கேள்விப்படாத அளவுக்கு துன்பங்களை சந்தித்து தாங்கிக் கொண்டு வருகின்றனர் என ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டெரஸ் கூறியுள்ளார்.
uஇஸ்ரேலின் சட்டப்பூர்வ தாக்குதலின் இலக்கு ஈரான் என இஸ்ரேலின் பொருளாதார அமைச்சர் கூறியுள்ளார். போரை விரிவுபடுத்துவதன் மூலம்தான் அமெரிக்காவை ஈடுபடவைக்க முடியும் எனவும் அதுதான் தங்களுக்கு பலன் தரும் எனவும் இஸ்ரேல் அரசியல்வாதிகள் எண்ணுகின்றனர்.
uகாசா மீது அணு ஆயுதங்களை வீசுவது தவறு இல்லை என மீண்டும் இஸ்ரேலிய அமைச்சர் அமிச்சாய் எலியாகு வன்மம் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இது போல பேசி உலகின் கண்டனங்களை பெற்ற இவர்மீண்டும் இவ்வாறு பேசுவது இஸ்ரேல் தோல்வி முகத்தில் உள்ளதா எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.
u50க்கும் அதிகமான ராணுவப் பணிக்கு அழைக்கப்பட்ட இஸ்ரேலிய பெண் வீரர்கள்எல்லைப் பகுதிகளுக்கு செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஒய்நெட் எனும் இஸ்ரேலிய பத்திரிகை கூறியுள்ளது.
uஇராக்கில் உள்ள பாலஸ்தீன ஆதரவு போர்க்குழுக்கள் தாங்கள் இஸ்ரேலுக்கு எதிரான போரில் இரண்டாவது கட்டத்துக்கு மாறியுள்ளதாக அறிவித்துள்ளனர். இதில்மத்திய தரைக்கடலில் இஸ்ரேல் நோக்கி வரும் கப்பல்களை முடக்குவதும் இஸ்ரேலின் முக்கிய துறைமுகங்களை தாக்குவதும் அடங்கும் என அறிவித்துள்ளனர். ஏற்கெனவே செங்கடலில் இஸ்ரேல் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. மத்திய தரைக்கடலிலும் தாக்குதல் நடந்தால் இஸ்ரேல் மேலும் இழப்புகளை சந்திக்கும்.
uஆஸ்திரேலியாவில் காது கேட்காத/ பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் பாலஸ்தீன ஆதரவு பேரணியை நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. எனினும் இவர்களின் கோரிக்கையை உணரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் இல்லை என்பது வேதனையான ஒன்று!
uஐரோப்பிய ஒன்றியம் ஏமனின் மீது தாக்குதல் நடத்தாது என ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இந்த
பிரச்சனையிலாவது ஐரோப்பா, அமெரிக்காவின் நிலையிலிருந்து மாறுபட்டிருப்பது வரவேற்க வேண்டிய ஒன்றுதான்! ஐரோப்பிய கப்பல்களை தாக்குவது இல்லை என ஏமன் ஏற்கெனவே அறிவித்துள்ளது.
uபடுகாயமுற்ற 100 பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க இத்தாலி முன்வந்துள்ளது. இதனை அந்த நாட்டின்ராணுவ அமைச்சர் வெளிப்படுத்தி யுள்ளார்.
uஏமனின் ஹவுதி அமைப்பினர் செங்கடலில் இரண்டு மணி நேரம் அமெரிக்க போர்க் கப்பலுடன் போரிட்டதாக ஏமன் ராணுவத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் விளைவாக இரண்டு அமெரிக்க வணிகக் கப்பல்கள் செங்கடலிலிருந்து திரும்பி விட்டன எனவும் கூறினார். இது உண்மை எனில் மிகப்பெரிய கப்பற்படை வைத்திருக்கும் அமெரிக்காவின் பெருமைக்கு இது ஒரு கரும்புள்ளி.