இஸ்லாமாபாத், மார்ச் 4- இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவி ஏற்றுக் கொண்டார். ஞாயிற்றுக் கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஷெபாஸ் ஷெரீப் 201 வாக்கு களையும் அவரை எதிர்த்து இம்ரான் கானின் கட்சி சார்பில் போட்டி யிட்ட ஓமர் அயூப் கான் 92 வாக்குகளையும் பெற்றார். இதனை தொடர்ந்து சபாநாயகர் சர்தார் ஆயாஸ் சாதிக், ஷெபாஸ் ஷெரீப் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
அந்நாட்டின் மொத்த முள்ள 265 இடங்களில் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்க 133 இடங்கள் தேவை.
வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு எந்த கட்சிக்கும் பெரும் பான்மை கிடைக்காத நிலை யில் எதிர் எதிர் துருவமாக இருந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி யும் சில சிறு கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்து ஷெபாஸ் ஷெரீப்பை பொது வேட் பாளராக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.