இஸ்லாமாபாத்,ஜன.18- ஈரான் எல்லைக்குள் பாகிஸ் தான் ஏவுகணை தாக்குதல் நடத்திய பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மிக மோசமான பதற்றச் சூழலுக்குச் சென்றுள்ளது. பாகிஸ்தான் - ஈரான் எல்லை யில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத் தில் இருந்த ஈரான் எதிர்ப்பு பயங்க ரவாத குழுக்கள் மீது ஈரான் ஏவு கணை தாக்குதல் நடத்தியது.
இதில் இரு அப்பாவி சிறுவர்கள் பலியாகினர்.தங்களது எல்லைக் குள் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் இறையாண்மையை கேள்விக் குள்ளாக்குவதோடு சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ் தான், ஈரானில் இருந்து பாகிஸ் தான் தூதரை திரும்பப் பெற்றது. தூதரை திரும்பப் பெற்ற மறுதினம் ஜனவரி 18 காலை வேளையில் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான், ஈரானின் சியாஸ்தான்-பலுசிஸ்தான் மாநி லத்தில் ஏவுகணை தாக்குதல் களை நடத்தியுள்ளது.
இதில் 7 நபர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலால் ஈரானின் சரவன் (saravan) நகர் வரை ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது.எனினும் அங்கு உயிர்ப் பலி ஏதும் ஏற்பட வில்லை என கூறப்பட்டுள்ளது. இத னால் பாகிஸ்தான் மற்றும் ஈரான் உறவு மோசமடைந்துள்ளது. சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட பாகிஸ்தானின் தற்காலி கப் பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கர் மற்றும் உகாண்டாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தற்கா லிக வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி ஆகியோர் தங்கள் பயணங்களை ரத்து செய்துவிட்டு நாடு திரும்ப வுள்ளனர்.
பாகிஸ்தான் - ஈரானுக்கு இடையே 900 கி.மீ எல்லையைப் பகிரும் பலுசிஸ்தான் பகுதியில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக தொடர் எல்லை மோதல்கள் நடைபெற்று வருகின்றன.எனினும் இந்தத் தாக்குதல் பெரும் விரிசலைக் காட்டுகிறது. குறிப்பாக பாலஸ் தீன - இஸ்ரேல் போரால் மத்திய கிழக்கு முழுவதும் போர்ப் பதற்றம் ஏற்பட்டு உள்ள சூழலில் இந்த புதிய தாக்குதல்கள் உலக அமைதிக்கு மேலும் பாதிப்பை உண்டாக்கும்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரே லின் மொசாத் உளவுத்துறை உரு வாக்கிய தீவிரவாதக் குழுக்க ளின் மூலம் ஈரானின் முன்னாள் தளபதி சுலைமானி நினைவு தினத்தில் இரட்டை குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து இதற்கு காரணமான நபர்களுக்கு பதிலடி கொடுக் கப்படும் என ஈரான் எச்சரித்த நிலை யில் சிரியா மற்றும் இராக்கில் இருந்த மொசாத் மற்றும் ஐஎஸ்ஐ எஸ்ஐ தீவிரவாதிகள் இயங்கி வந்த கட்டிடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. அதனை தொடர்ந்து அண்டை நாடுகளில் உள்ள ஈரான் எதிர்ப்பு குழுக்கள் மீதும் தாக்கு தலை நடத்தி வருகிறது குறிப்பி டத்தக்கது.