world

img

ஆப்கன். தூதரின் மகளை கடத்தி சித்ரவதை....

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகெய்லின் மகள் சில்செலா அலிகெய்ல் இஸ்லாமாபாத்தில் வெள்ளியன்று கடத்தப்பட்டார். பின்னர் அடையாளம் தெரியாத நபர்களால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டு
உள்ளார். சில்செலா தற்போது ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளது. மேலும், ஆப்கானிஸ்தான் தூதரகம் மற்றும் தூதரகங்களின் முழு பாதுகாப்பையும் உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

;