world

img

பாகிஸ்தானில் லாரி மீது பேருந்து மோதி விபத்து -30 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின், காசிகான் மாவட்டத்தின் நெடுஞ்சாலையில், பயணிகள் பேருந்து ஒன்று சியால்கோட்டிலிருந்து, ராஜன்பூருக்கு சென்று கொண்டிருந்தது.  அப்போது அந்த பேருந்து எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஒரு டிரக்  மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில்  பயணம் செய்த பெண்கள் குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். இந்நிலையில் படுகாயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வருகிறார்கள். 

இந்த பேருந்தில் பயணித்த பயணிகளில் பெரும்பான்மையானவர்கள்  பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊருக்குச் சென்று கெண்டிருந்த தொழிலாளர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, பயணிகளின் பாதுகாப்பிற்காகக் கவனமாக வாகனம் ஓட்டுமாறு பொது வாகன ஓட்டுநர்களிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

;